MailPrint
வில்லனாக மாறிய இயக்குனர்
[ Thursday, 03 January 2013, 10:54.43 AM GMT +05:30 ]
தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவாக இருந்த லியாகத்தலிகான் வில்லனாக நடிக்கிறார்.

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில்தான் அவர் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்.

ஸ்ரீதர்& தமலி என்ற புதுமுங்கள் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.

கே.எம்.கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்குகிறார்.

இப்படத்தில் காதலை எதிர்க்கும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் லியாகத்தலிகான்.

விஜயகாந்தின் படங்களுக்கு கதை வசனம் எழுதிய லியாகத்தலிகான் எங்க முதலாளி, பாட்டாளி உள்பட சில படங்களையும் இயக்கி உள்ளார்.