மக்கள் தொலைக்காட்சியில் அரங்கேறி வருகின்ற வித்தியாசமான நிகழ்ச்சி குழந்தைகள் பாராளுமன்றம்.
நோட்டு கொடுத்து வாக்குகள் வாங்கி அமைச்சராகும் இந்த சூழ்நிலையில், நோட்டு புத்தகத்திலும் பாடப்புத்தகத்திலும் மூழ்கிக் கிடக்கும் மாணவச் செல்வங்கள் பாராளுமன்றத்திற்கு படையெடுத்துள்ளார்கள்.
கல்வி பயிலும் இவர்கள் கல்வித்துறை அமைச்சராகவும் விளையாடி மகிழும் இச்சிறுவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் மாணவச் செல்வங்களான இவர்கள் மக்களவைத்தலைவராகவும் பதவியேற்று இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்கள்.
ஜுலை 1ல் தொடங்கிய இந்நிகழ்ச்சி, மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.



|