MailPrint
இயக்குநரை கோபமடையவைத்த அமீர்கான்
[ Wednesday, 04 July 2012, 07:11.17 AM GMT +05:30 ]
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக 100 சதவீத உழைப்பை தருபவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஆமிர் கான்.

யஷ் சோப்ரா தயாரிப்பில் அமீர்கான் நடிக்க உள்ள படம் தூம்-3. இந்திய சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் யஷ் சோப்ரா.

ஆனால் அவரே மிரண்டு போகும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக தூம் 3 படத்தை தள்ளிப்போட்டு வருகிறார் ஆமிர் கான். முதல் தடவை படப்பிடிப்பு நடக்க இருந்தபோது, சத்யமேவ ஜயதே டிவி நிகழ்ச்சியில் பிசியாக இருக்கிறேன் எனக் கூறி படப்பிடிப்பை தள்ளிப்போட்டார் ஆமிர்.

படத்தின் கதைப்படி ஆமிர் கான் ஜிம் உடல்கட்டுடன் நடிக்க வேண்டும். இதற்காக முழுமையாக ரெடி ஆகாததால் 2வது முறையாக படப்பிடிப்பு தள்ளிப்போட்டார். கடைசியாக ஜூன் 29ம் திகதி படப்பிடிப்பு தொடங்கலாம் என ஆமிர் கூறியிருந்தார்.

யஷ் சோப்ராவும் ஓகே சொன்னார். ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 29ல் படப்பிடிப்பு தொடங்கவில்லை. மேலும் பத்து நாட்களுக்கு படப்பிடிப்பை தள்ளிப்போட்டுவிட்டார் ஆமிர். காரணம், ஹேர் ஸ்டைல்.

வழக்கமாக தனது படங்களுக்கு ஹேர் ஸ்டைல் கலைஞராக பணியாற்றும் அவன் என்பவரையே தூம் 3 க்கும் தேர்வு செய்தார் ஆமிர். இருவரும் சேர்ந்து இந்த கதாபாத்திரத்திற்காக பல்வேறு ஸ்டைல்களில் தலைமுடியை மாற்றிப்பார்த்தனர்.

ஆனால் திருப்தி தரவில்லை. கதைப்படி சர்வதேச ஹைடெக் கொள்ளையனாக ஆமிர் கான் நடிக்கிறார். அதற்கேற்ப லுக் வேண்டும் என மெனக்கெடுகிறார் அமிர். படப்பிடிப்பு தாமதம் ஆவதால் அதிர்ச்சியடைந்த யஷ் சோப்ரா, அதிருப்தியில் உள்ளாராம்.

ஆனால் இது பற்றி யஷ்சோப்ராவின் மகனும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஆதித்ய சோப்ரா கூறுகையில், 'எது பெஸ்ட் என்பது ஆமிருக்கு நன்றாக தெரியும். அவர் ஏதாவது செய்கிறார் என்றால் அது படத்தின் நன்மைக்காகவே இருக்கும்' என்றார்.