இதில் த்ரிஷாவுக்கு ஏக மனவருத்தம். காரணம், இந்த இரு வேடங்களையும் முதலில் த்ரிஷாவிடம் சொல்லி, விரும்பிய வேடத்தில் நடிக்குமாறு வாய்ப்பு கொடுத்திருந்தாராம் வெங்கட் பிரபு.
அதில் த்ரிஷா வேண்டாம் என்ற வேடத்தில் லட்சுமிராய் கலக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியானதன் விளைவு, லட்சுமி ராய் பற்றி த்ரிஷா வெளிப்படையாக கமெண்ட் அடித்தார்.
பதிலுக்கு லட்சுமி ராய் போட்டுத் தாக்க, கடந்த ஓராண்டு காலமாக நீடித்தது இருவருக்கும் பனிப்போர். இருவரும் விழாக்களில் சந்திப்பதைக் கூட தவிர்த்தனர்.
இப்போது இருவரும் சண்டைக்கு பை சொல்லி, நட்புக்கு ஹாய் சொல்லியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த துபாய் விருது வழங்கும் விழாவில் லட்சுமி ராயும், த்ரிஷாவும் அருகருகே அமரும் வாய்ப்பு. விழாவுக்குப் பின்னர் நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய நடந்த பார்ட்டியின் போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.
தொடர்ந்து, இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம். விருந்து முடியும் வரை பிரியாமலிருந்தவர்கள், பிரியா விடைபெற்று வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |