இப்படத்தில் அங்கனா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். மனோ இப்படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி கருணாஸ் கூறியதாவது, இதில் பயந்த சுபாவம் கொண்ட கான்ஸ்டபிளாக நடிக்கிறேன். பதவி உயர்வு பெற்றும் கடைசிவரை பயந்தாங்கொள்ளியாகவே இருக்கிறேன்.
நான் சீரியஸாகச் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு கொமெடியாக தெரியும். ஒரு கோழை எப்படி வீரனாகிறான் என்ற பார்முலா கதை என்றாலும், அதை கொமெடி படமாக வழங்குகிறோம்.
80 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. கோவை சரளாவின் கொமெடி நான்-ஸ்டாப்பாக சிரிக்க வைக்கும். என் மகன் கென், ஓப்பனிங் பாடலில் சமைரா கானுடன் ஆடியுள்ளான்.
என் மனைவி கிரேஸ் “சூடாமணி கேட்டிலாலோ” பாடலைப் பாடியிருக்கிறாள் என்று தெரிவித்துள்ளார். |