இயக்குனர் இராஜகுமாரன் இதற்கு முன்பு இயக்கிய எல்லா படங்களிலும் அவரது மனைவி தேவயாணி மட்டுமே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்திலும் தேவயாணி தான் கதாநாயகி. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் இராஜகுமாரானுடன் 25 நட்சத்திரங்களுக்கு மேற்பட்டோர் நடித்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு கதாநாயகி 4, 5 படம் நடிப்பதே தடுமாற்றமாய் உள்ள நிலையில் தேவயாணிக்கு இது 75வது படம் ஆகும்.
தேவயாணி இத்தனை படம் முடித்திருப்பதும் அதுவும் 75வது படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதும் பெருமைக்குரிய விடயம்.
இதனால் தேவயாணியை பாராட்டும் விதமாக "எவர்க்ரீன் ஸ்டார்" என்று டைட்டிலில் போட்டிருக்கிறார் இராஜகுமாரன்.
படங்கள் டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்படும் இந்த காலகட்டத்தில் திருமதி தமிழ் 1,45,000 அடிவரை பிலிமில் அதுவும் ஈஸ்ட்மென் கலரில் 4.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |