எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவின் மிக பாடகராக விளங்கியவர், இவரின் குரலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.
கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனை நெகடிவ் என வந்தது.
ஆனாலும் அவர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார், நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மோசமானதாக அறிக்கை வெளியானது.
இந்நிலையில் இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் தற்போது நடிகர் தனுஷ் எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "எல்லா வீடுகளிலும் உங்கள் குரல் ஒளித்து கொண்டிருக்கும், நீங்கள் எல்லா குடும்பத்தினர்களில் ஒரு அங்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்கள் குரல் ஒளித்து கொண்டு தான் இருக்கும்", என பதிவிட்டுள்ளார்.
Rip SPB sir 💔💔the voice which will echo in everyone’s house forever, a family member in every household. Ur voice and U will continue to live with us for generations to come. My condolences to his family and dear ones. Thank you sir for everything sir. you will be dearly missed
— Dhanush (@dhanushkraja) September 25, 2020