கெட்டவன் படம் நடிக்க ஆரம்பித்து பின் அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என்று கூட ரசிகர்கள் அடிக்கடி கேட்பதுண்டு.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் GT நந்து தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் "கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு தனுஷ் தான் காரணம்" என கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சிம்புவிடம் கதை சொன்ன அவர் அதன் பின் ஜீவா, பரத் ஆகியோரிடம் சொன்னாராம். சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தனுஷை சந்தித்த கதை சொல்ல சென்றுள்ளார், ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
பின் சிம்புவே கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் துவங்க பணிகள் நடந்தது. அப்போது சிம்புவுக்கு போன் செய்த தனுஷ் "நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். இப்படி நன்றி கெட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்?" என கேட்டாராம்.அதனால் சிம்பு-GT நந்து இடையே மனக்கசப்பு ஆரம்பித்துள்ளது.
ஒரு சமயத்தில் படத்தையே நிறுத்த அதுவே காரணம் ஆகிவிட்டது என இயக்குனர் GT நந்து தெரிவித்துள்ளார்.