விஜய்யின் மெர்சல் படம் தான் இப்போது தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தி வரும் படம். இப்படம் 14 நாள் முடிவில் இதுவரை ரூ. 210 கோடி வசூலித்துள்ளது.
படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.