டாஸ்க் காரணமாக இரண்டாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி முருகதாஸ்..{ப்ரோமோ 2}
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி கடந்த ஞாற்றிக்கிழமை எலிமினேஷன் என்பதால் நடிகை ரேகா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டார். இதனால் மற்ற போட்டியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் இரண்டாக பிரிந்தனர்.
கலகலப்பாக டாஸ்க்கை செய்து கொண்டிருந்த போட்டியாளர்களிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.